தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது – முதல்வர் பழனிசாமி

edappadi palanisamy

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பிறகு உரையாற்று வருகிறார். முதல்வர் உரை, ” தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதமும் மிக குறைவு. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி, உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளன. குடும்பத்தில் ஒருவருக்கு தலா 2 என்கிற வீதத்தில் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் கடைமடைக்கும் தண்ணீர் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிமரத்துப்பணிகள் 85 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றுள்ளன. விலையில்லா முகக்கவசம் மற்றும் முகாம்களால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் உள்ளன. சென்னையில் மட்டும் கொரோனா ஒழிப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில்

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? பேருந்து, ரயில் சேவைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.

தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  6,426  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,114 –  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.   சென்னையில் இன்று ஒருநாளில் 1,117-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தண்ணீரை பீய்ச்சியடித்து முறைப்படி வரவேற்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள்தண்ணீரை பீய்ச்சியடித்து முறைப்படி வரவேற்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள்

தண்ணீரை பீய்ச்சியடித்து முறைப்படி வரவேற்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள்
பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன.
பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.
ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது.
30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்தது.
7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்திய எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நுழைந்தன.
அப்போது மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலுடன் ரபேல் போர் விமானத்தை இயக்கிவரும் குழு தொடர்பு கொண்டது.
 ‘‘இந்திய கடல் எல்லைக்குள் ரபேல் தலைவரை வரவேற்கிறோம் என்று ஐ.என்.எஸ்.’’ தகவல் அனுப்பியது.
அதற்கு ரபேல் விமானி, ‘‘மிக்க நன்றி. கடல்களைக் காக்கும் இந்திய போர்க்கப்பலைக் கொண்டிருப்பது மிகவும் உறுதியளிக்கிறது என்றார்.
பின்னர், ஐஎன்எஸ, ‘‘பெருஞ்சிறப்போடு இந்திய எல்லையை தொடலாம். மகிழ்ச்சியான தரையிறக்கங்கள்’’ என்றது.
அதன்பின் இரண்டு Su-30MKIs விமானங்கள் படைசூழ கம்பீரமாக அரியானா நோக்கி  பயணத்தை தொடர்ந்த ரபேல் விமானங்கள் மாலை 3.15 மணியளவில் அம்பாலா விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதையடுத்து புதிய விமானங்கள் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்படும் போது கடைபிடிக்கப்படும் வாட்டர் சல்யூட் என்ற முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, ஓடுதளத்தில் தரையிறங்கிய 5 விமானங்கள் மீதும் இரு புறமிருந்தும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.
விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ரபேல் போர் விமானங்களை வரவேற்றார். இந்த வரவேற்பு நடைமுறைகளுக்கு பின்னர் தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் ரபேல் இணைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிலிருந்து சீறிய ஏவுகணைகள்.. பதுங்கு குழிக்கு ஓடிய அமெரிக்க வீரர்கள்.. அலர்ட் செய்யப்பட்ட ரபேல்

தெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியாவுக்கு வருகை தரும் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஈரானிய ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணைகள் அதற்கு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு அருகே, பயிற்சிகள் மேற்கொண்டுள்ளன.

 

    நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட Rafale.. IAF வெளியிட்ட புகைப்படம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள அல் தஃப்ரா விமான நிலையம், தலைநகரான அபுதாபியில் இருந்து சுமார் ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அல் தஃப்ரா தளத்தில் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில்தான், பிரான்சிலிருந்து இந்தியாவுக்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள், நேற்று இரவு அல் தஃப்ரா தளத்தில் தரையிறங்கியது. அங்கு அவை ஓய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

     

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இப்படியான சூழ்நிலையில்தான், ஈரான் நாட்டின், இஸ்லாமிக் புரட்சி கார்ட் கார்ப்ஸ் (IRGC) ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த ஏவுகணை அல் தஃப்ரா விமானப் படை தளம் நோக்கி சீறிச் செல்லக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து உளவுத்துறை, எச்சரிக்கைவிடுத்தது.

    இரு விமானப் படை தளங்கள்

    இரு விமானப் படை தளங்கள்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப் படை தளமும், கத்தாரிலுள்ள அல் உதீட் விமானப் படை தளமும் எச்சரிக்கையாக இருக்கும்படி வார்னிங் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க செய்தி சேனல் சி.என்.என்னின் பார்பரா ஸ்டார் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஆனால், எந்த ஏவுகணைகளும் இந்த தளங்களில் ஒன்றையும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரான் ஏவுகணைகள்

    ஈரான் ஏவுகணைகள்

    அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கையாளர் லூகாஸ் டாம்லின்சனும் இந்த சம்பவத்தை உறுதி செய்தார். ஒரு ட்வீட்டில், டாம்லின்சன், மத்திய கிழக்கு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். 3 ஈரானிய ஏவுகணைகள் டியூஸ் தளங்களுக்கு அருகே தண்ணீரில் விழுந்துள்ளன, என்று, அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.

    பதுங்கு குழியில் அமெரிக்க வீரர்கள்

    பதுங்கு குழியில் அமெரிக்க வீரர்கள்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் மறைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார். ராணுவப் பயிற்சியின் போது ஈரான் புரட்சி படை படகுகளிலிருந்து ஏவுகணையை ஏவிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானிய கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக கீழே இறங்கி பயிற்சி செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

    ரபேல் விமானங்கள்

    ரபேல் விமானங்கள்

    அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இடையே நமது ரபேஃல் விமானங்களும், எமிரேட்ஸில் இருந்ததால், இந்திய தரப்பும் உஷார் நிலையில் இருந்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இடையே நட்புறவு நிலவும் நிலையில், நமது போர் விமானத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்பு இல்லை. இது அமெரிக்க படைகளுக்கு எதிரான போர் பயிற்சிதான் என்கிறார்கள் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

    ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை- அம்பாலாவில் 144 தடை உத்தரவு-விளக்கு ஏற்ற பாஜக அழைப்பு!

    அம்பாலாவில் 144 தடை உத்தரவு

     

    டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறையை வலிமைப்படுத்தும் ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகலில் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தை வந்தடைகின்றன. இதனையடுத்து அம்பாலாவில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Rafale விமானங்கள் இன்று இந்தியா வந்துவிடும் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது ரஃபேல் போர் விமானங்கள் விவகாரம். நாட்டையே உலுக்கிய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க 2106-ல் ரூ58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து பெற இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 30,000 அடி உயரத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரஃபேல் போர்விமானங்கள்- வைரல் படங்கள் 5 ரஃபேல் விமானங்கள் முதலாவது ரஃபேல் போர் விமானத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி பிரான்ஸ் சென்ற் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக முறைப்படி பெற்றார். இந்த நிலையில் ஐந்து ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சுமார் 7,000 கி.மீ தொலைவு இந்த விமானங்கள் பயணிக்கின்றன. வரும்போதே அசால்ட் இந்த ரஃபேல் போர் விமானங்களுக்கு உதவியாக எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்டவற்றுக்காக பிரான்ஸ் விமானங்களும் உடன் வருகின்றன. நடுவானில் 30,000 அடி உயரத்தில் ரஃபேல் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன. அம்பாலாவில் 144 தடை உத்தரவு ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தை வந்தடைகின்றன. அங்கு விமானப் படை தளபதி பதாரியா, முறைப்படி இந்த விமானங்களை வரவேற்று விமானப் படைக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அம்பாலாவில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன

    பலம் பெறும் இந்திய விமானப்படை; ஃபர்ஸ்ட் செட் ரெடி – சீறி வரும் ரபேல் போர் விமானங்கள்

    இந்திய விமானப் படையில் இணைவதற்காக முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேருகின்றன.

    Rafale Jets at Ambala

    Rafale Jets at Ambala
    இந்தியா – பிரான்ஸ் இடையே 2016ஆம் ஆண்டு ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக கையெழுத்திடப்பட்டது. மொத்தம் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை பல்வேறு கட்டங்களாக தயாரித்து வழங்க பிரான்ஸின்

    டசால்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். இந்த சூழலில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றன. இதனை முறைப்படி பெற்றுக் கொள்ள, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார்.

    அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த 10 விமானங்களில் 5 ரபேல் போர் விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன. இதில் மூன்றில் ஒரேவொரு இருக்கையும், இரண்டில் 2 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த விமானங்களை இயக்க இந்திய விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் பிரான்ஸில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர். வரும் வழியில் வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படங்களை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ரபேல் போர் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள

    அம்பாலா விமானப்படை தளத்தில் இன்று மாலை தரையிறங்குகின்றன.

    இதையொட்டி அம்பாலாவை சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வேறெந்த விமானங்களும் வானில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்கள் தரையிறங்கும் போது பொதுமக்கள் கூடவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அம்பாலாவில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.

    லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே விமானங்களை தரையிறக்க வானிலை ஒத்துழைக்கவில்லை எனில், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 36 ரபேல் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நந்திதாவின் பின்னழகை பார்த்து சொக்கிவிழ்யும் இளசுகள்.! வைரலாகும் புகைப்படம்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மூலம் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றினார்.என்னத்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தாலும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்தமிழ்  சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டால் அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக தன்னை வளர்த்துக் கொள்வார்கள் ஆனால் நந்திதா அவர்களோ எதற்கும் அவசரப்படாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான முண்டாசுப்பட்டி ,எதிர்நீச்சல் ,கலகலப்பு2 போன்ற படங்கள் இதற்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது.

    இதனைதொடர்ந்து மேலும் தன்னை மேலும் வளர்த்து கொள்ள நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அந்த வகையில் தற்பொழுது விஷ்ணு விஷால் உடன் இணைந்து FIR  என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வெளிவர இருந்த  நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளி போய் உள்ளது.சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான இவர் பெரும்பாலும் சினிமாவில் கூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில்  கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில்  இவர் சமிபத்தில் வெளிவரும்  புகைப்படங்கள் அனைத்தும் சற்று கவர்ச்சியை காட்டி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    அந்த வகையில் தற்போது தனது பின்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஆகா என்ன முதுகு என கூறி புகைப்படத்தை உற்றுநோக்கிய பார்த்து வருகின்றனர். இதோ வந்த புகைப்படம்.

    nandhitha
    nandhitha

    முதல் முறையாக ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் வரலட்சுமி சரத்குமார்.! வைரலாகும் புகைப்படம்.

    Actress-varalaxmi-sarathkumar-new-look-photo-viral-in-social-mediaதமிழ் சினிமாவில் நடித்த பிரபலங்களின் வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி நடித்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு வலம் வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர் முதல் படமே அவருக்கு சிறந்த வெற்றி படத்தை கொடுத்தன் முலம் அவர்  தமிழ் சினிமாவில் தன்னை நிலை திருத்திக் கொள்ள முடியும் என்பதை சுதாரித்துக் கொண்டார்.

    இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் நடித்த தாரதப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2, மதகஜராஜா பிற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான கதைகள் அமையாததால் வருகின்ற கதையெல்லாம் தவிர்த்து வருகிறார் இதனாலேயே அவர் சமீபகாலமாக நடிக்காமல் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் வரலட்சுமி சரத்குமார் பற்றி வதந்திகளும் மற்றும் சர்ச்சைகளிலும் கை ஓங்கின. இவர்  நடிகர் விஷால் மற்றும் பிரபல தொழிலதிபர் யாரேனும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக வதந்திகள் வெளியாகின இதற்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் லட்சுமி சரத்குமார் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் ரசிகர்களை கவர்வது மற்றும் சினிமா வாய்ப்பையே பெரிதும் யோசித்து கொண்டு வருகிறார் அந்த வகையில் ரசிகர்களை கவர தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் கும்முன்னு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக ஜிம் உடையில் பார்க்கும்போது மனசுக்குள்ள ஏதோ பண்ற மாதிரி இருக்கே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

    varalakshmi
    varalakshmi

     

    மோசமான உடையில் ஆண்ட்ரியா மொத்தமும் தெரியும் படி போஸ் – வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

    நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

    தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

    www.filmibeat.com/img/2019/08/c-032-1565590568.jpg

    அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

    மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    அந்த வகையில், அந்த வகையில், தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி, சத்யராஜ்& பார்த்திபன் – கொரோனாவுக்குப் பின் புதிய திட்டம்!

    சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி, சத்யராஜ்& பார்த்திபன் – கொரோனாவுக்குப் பின் புதிய திட்டம்!

     

     

    கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

     

     

    கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

    கொரோனாவால் சினிமா துறை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. நடிகர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாமல் மக்கள் உடனடியாக திரையரங்குகளுக்கு வருவார்களா என்றும் தெரியவில்லை. இதனால் குறைந்த முதலீட்டிலேயே படத்தைத் தயாரிக்க விரும்புகின்றனர். அதன் ஒரு கட்டமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

     

    இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள் தவிர மற்ற கலைஞர்கள் யாருக்கும் சம்பளம் என்று முன்பணம் கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும்.

    மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியையும் 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய உள்ளனராம். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.