rfxsignals May 18, 2020 No Comments

ராஷ்மிகாவின் விநோதப் பழக்கம்

 

Border Collie

 

இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று சிறிது நேரம் டுவிட்டரிலும் உலாவினார். அப்போது அவரிடம் ரசிகர்கள் கேள்விக்கனைகளை தொடுத்தனர். வழக்கம் போல் தயக்கமின்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவர்.

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, துன்பமான நேரத்தில் சிரிப்பது எனது பழக்கம். இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பது எனக்கு தெரியும். ஆனால் அது தான் உண்மை. எனவே எந்த ஒரு சூழ்நிலையையும் என்னால் எளிதாக சமாளித்துவிட முடியும், என்றார்.

இடுக்கண் வருங்கால் நகுக என திருவள்ளூர் கூறிய அறிவுரையை ராஷ்மிகா அப்படியே பின்பற்றுகிறார் போலும். நல்ல பழக்கம் தான் என்றாலும் இது விநோதமானது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.