காஜல் அகர்வால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் சோகம்!!
காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற இந்தித் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
அடுத்து 2008 ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பிரபலமாக வலம் வரும் நடிகையான காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
.
இந்தியன் 2 மட்டுமல்லாது, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.
அவ்வப்போது உடற்பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் என பல வீடியோக்களைப் போட்டு அசத்திவருகிறார். அந்தவகையில் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவினைப் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்
அதாவது ட்விட்டரில், “கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை என்னுடைய கல்லீரல் இந்த வாழ்நாளில் பார்த்தது இல்லை” என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனதோடு, ரொம்ப குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்