மூன்று மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறிய OTT.. அப்படியே கிளம்ப சொன்ன தளபதி விஜய்
ஓவர் தி டாப் மீடியா சர்வீஸ் (ஓ.டி.டி) கண்டு மிரண்டு போய் உள்ளது தமிழ் சினிமா. அதற்கு பல காரணங்கள் உண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் ஒளிபரப்பப்பட்டால் தமிழ் சினிமா அழிந்துவிடும் என்பதுதான்.
தற்போது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி-யில் வெளியிடப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இப்படி ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் ஓ.டி.டி பிளாட்பார்மில் வெளியிட்டால் நாளை தியேட்டர்களை இழுத்து மூடும் அபாயம் ஏற்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சினிமா துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பு, நடிகர்களின் சம்பளம் கோடிகளில் பெற முடியாது இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை மூன்று மடங்கு அதிகமாக லாபம் தருவதாக கூறி பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வேண்டாம் என்று கூறியதற்கு பல காரணங்கள் உள்ளது.
முக்கியமான ஒரு சில காரணங்களை தற்போது பார்க்கலாம்; முதல் காரணமாக பார்த்தால் ரசிகர்கள் பால் அபிஷேகம் பண்றது, அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதுதான், முக்கியமான இரண்டாவது காரணம் வினியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சில கோடிகளை வங்கியுள்ளனர்.
இதனால் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை நொறுங்கிவிடும், மூன்றாவது இதுபோன்று ஓ.டி.டி-யில் வெளியிட்டால் நாளை அரசியலுக்கு வரும் நடிகர்கள் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். இப்படி சினிமா துறையினர் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றன.
இதனால் தமிழ் சினிமா காப்பாற்ற பட்டுள்ளதாகவும், தளபதியின் அரசியல் கனவு காப்பாற்ற பட்டதாகவும் சினிமா துறையினர் இணையதளத்தில் விவாதப் பொருளாக எடுத்துள்ளனர். எது எப்படியோ தளபதி படம் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே மரண மாஸ் ஆக இருக்கும்.