rfxsignals May 16, 2020 No Comments

என்ன ஆச்சரியம்: புது மாப்பிள்ளை ராணாவை யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க

 

மிஹீகா பஜாஜை திருமணம் செய்யப் போவதாக அறிவித்த நடிகர் ராணாவை ஸ்ரீரெட்டி வாழ்த்தியுள்ளார்.

 

rana daggubati

 

தெலுங்கு நடிகர் ஹைதராபாத்தில் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் மிஹீகா பஜாஜை காதலித்து வருகிறார். ராணா ப்ரொபோஸ் செய்ய மிஹீகாவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ராணா தான் மிஹீகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் காதலை அனைவரும் அறியச் செய்தார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தினார்கள். இந்நிலையில் சர்ச்சை நடிகைஸ்ரீரெட்டிராணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுடன் நிம்மதியாக வாழ கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ஸ்ரீரெட்டி ராணாவை வாழ்த்தியை பார்த்து பலரால் அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

 

samayam tamil

 

ராணாவை ஸ்ரீரெட்டி வாழ்த்தியதில் என்ன பெரிய அதிசயம் என்று நினைக்கிறீர்களா?. சென்னையில் வந்து செட்டில் ஆகும் முன்பு ஸ்ரீரெட்டி ராணாவின் தம்பி அபிராம் மீது பாலியல் புகார் தெரிவித்தார். முன்பு ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின்(ராணாவின் அப்பா) மகன் பட வாய்ப்பு தருவதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். ஸ்டுடியோவில் வைத்து என்னுடன் உறவு கொண்டார் என்றார்.

பேட்டியில் சுரேஷ் பாபுவின் எந்த மகன் தன்னை ஏமாற்றினார் என்பதை ஸ்ரீரெட்டி கூறவில்லை. இதனால் அது ராணாவா, அபிராமா என்று பலரும் குழம்பினார்கள். பின்னர் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தான் அபிராம் பெயரை சொன்னார் ஸ்ரீரெட்டி. மேலும் தானும், அபிராமும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டார்.

 

samayam tamil

 

தம்பியை விளாசிவிட்டு அண்ணனுக்கு ஸ்ரீரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளதால் தான் பலரும் வியக்கிறார்கள். லாக்டவுன் நேரத்தில் ஆன்லைனில் ராணா மிஹீகாவிடம் ப்ரொபோஸ் செய்தார். லாக்டவுன் முடிந்த பிறகு முறையே நிச்சயதார்த்தம் நடக்குமாம்.

ராணா, மிஹீகாவின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. ராணாவின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்த நிலையில் அவர் மிஹீகாவை திருமணம் செய்யப் போவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த மிஹீகாவுக்கும், ராணாவுக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். பல ஆண்டுகளாக இருவருக்கும் பழக்கமாம். ஆனால் அந்த பழக்கம் தற்போது தான் காதலாக மாறி திருமணம் வரை வந்துள்ளது. இந்த காதல் திருமணத்தில் முடியும் என்பது ராணா, மிஹீகா ஆகியோரின் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்கனவே தெரியுமாம்.

ராணாவுக்கு திருமணம் என்றதும் தெலுங்கு ரசிகர்களோ அடுத்து பிரபாஸுக்கு எப்பொழுது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பிரபாஸுக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று கூறப்படுகிறது.

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது என்று பேச்சு கிளம்பியது. இதை பிரபாஸ் பலமுறை மறுத்தும் யாரும் நம்பவில்லை. பிரபாஸுக்கு அவர் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு பெண்ணும் சரியாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாக்டவுனால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் என்று வதந்தியை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரபாஸுக்கு திருமணம் ஆகும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது போன்று