நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்

நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்

 

Border Collie

 

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் சோனால் வெங்குர்லேகர். ஏ தேரி கலியான் தொடர் மூலம் புகழ் பெற்ற அவர் யே வாதா ராகா, சாஸ்திரி சிஸ்டர்ஸ், தேவ், லால் இஷாக், யே தேறி கலியான், அலெக்மி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

சோனால் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளார். படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பெரும் பணப் பிரச்சினையில் சிக்கியுள்ளார். சாப்பாட்டு செலவுக்கு வழியில்லாமல் தவித்த அவருக்கு அவரது மேக்அப் மேன் 15 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். இதுகுறித்து சோனால் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

எனக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பாளர் நீண்ட காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அடுத்த மாத செலவுக்கு காசு இல்லை என்று என் மேக்கப் மேனிடம் கூறினேன். அவரின் மனைவி வேறு கர்ப்பமாக உள்ளார், அதனால் பல செலவுகள் இருக்குமே என்று எனக்கு அவரை நினைத்து கவலையாக இருந்தது.

என் மேக்கப் மேன் எனக்கு அனுப்பிய மெசேஜை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மெசேஜை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மேடம் என்னிடம் ரூ. 15 ஆயிரம் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அதை பெற்றுக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு பிரசவம் ஆகும் நேரம் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று அவர் தெரிவித்தார்.

எனக்கு லட்சக் கணக்கில் பணம் தர வேண்டியவர்கள் நான் போன் செய்தால் அட்டென்ட் செய்வது இல்லை. மேலும் என் எண்ணை பிளாக் செய்வதுடன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.என் மேக்கப் மேன் பங்கஜ் குப்தாவை என் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். அவர் கொடுத்த பணம் பெரிய விஷயம் அல்ல. அவர் என்னை பற்றி நினைத்தது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

அருண் பிரசாத் மரணம் : ஷங்கர் இரங்கல்

அருண் பிரசாத் மரணம் : ஷங்கர் இரங்கல்

 

Border Collie

இயக்குனர் ஷங்கரின் உதவியாளரும், ஜிவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த 4ஜி படத்தை இயக்கி இயக்குனராக களமிறங்கிய அருண் பிரசாத்(வெங்கட் பாக்கர்) சாலை விபத்தில் இன்று(மே 15) காலை பலியானார். முதல் படம் வெளியாகும் முன்பே அவர் மரணத்தை தழுவியது 4ஜி படக்குழுவினரையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில், என் முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குநருமான அருணின் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர். கடின உழைப்பாளி நீ. உனக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தளபதி விஜயை பார்த்து பொறாமைப்பட்ட தல அஜித்.. ‘சுச்சி லீக்ஸ்’ சுசித்ரா போட்ட புது குண்டு!

தளபதி விஜயை பார்த்து பொறாமைப்பட்ட தல அஜித்.. ‘சுச்சி லீக்ஸ்’ சுசித்ரா போட்ட புது குண்டு!

 

நடிகர் விஜயை பார்த்து நடிகர் அஜித் பொறாமைப்பட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது லாக்டவுன் என்பதால் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் போன் மற்றும் தங்களின் கேன்டிட் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் சோஷியல் மீடியாக்களில் லைவ் சேட் மற்றும் வீடியோ கால் மூலமாக தங்களின் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

யாரோ பெரிய கை

 

யாரோ பெரிய கை அந்த வகையில் பிரபல பாடகியும் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவருமான ஆர்ஜே சுசித்ரா ஊடகங்களுக்கு வீட்டில் இருந்தப் படியே நேர்க்காணல் அளித்து வருகிறார். சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, அதற்கு பின்னால் யாரோ பெரிய கை இருக்கிறார்கள் என்றார்.

அஜித்தை சந்தித்தேன்

 

அஜித்தை சந்தித்தேன்

இந்நிலையில் மீண்டும் ஒரு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கிறார் சுசித்ரா. அவர் கூறிய அந்த விஷயம்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது பார்ட்டி ஒன்றில் பங்கேற்றபோது தான் அஜித்தை சந்தித்தாக கூறினார்.

 

எப்படி இப்படி அமையுது?

 

எப்படி இப்படி அமையுது?

அப்போது விஜயின் வேட்டைக்காரன் படத்தில் தான் பாடிய ஒரு சின்ன தாமரை பாடலை அஜித் வெகுவாக பாராட்டியதாகவும் கூறினார். மேலும் விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களாகவே கிடைக்கிறது என்றும் செல்லமாக பொறாமைக் கொண்டார் என்றும் வேடிக்கையாக கூறியுள்ளார் சுசித்ரா.

கடைசி பாடல்

 

கடைசி பாடல்

வேட்டைக்காரன் படம் பாபு சிவன் என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தில் விஜய் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோல் லீடிங் ரோலில் நடித்தனர். சுசித்ரா கடைசியாக அனிருத் இசையில் வணக்கம் சென்னை படத்தில் அய்லசா அய்லசா பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.. வெறித்தனமாக நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்..  வெறித்தனமாக நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…

 

 

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம்  மாஸ்டர். மாநகரம் மற்றும்  கைதி ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்

 

இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

 

 

இதடையே, மாஸ்டர் படம் பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் போஸ்ட் புரொக்ஷன் வேலை நடைபெற்று வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின எனக் கூறியுள்ளார்.

ஆனால் படம் வெளியீடு தொடர்பாக எந்தத் தகவலையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. மீண்டு படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

 

அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன வலிமை டீம்.. தல இப்படி சொல்லிட்டாரே என வினோத் வருத்தம்

அஜித் அனுப்பிய ஈமெயிலில் ஆடிப்போன வலிமை டீம்.. தல இப்படி சொல்லிட்டாரே என வினோத் வருத்தம்

 

Ajith Kumar Rides 'Valimai' Bike from Hyderabad to Chennai?

            ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். போனி கபூர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை, நிரவ் ஷா ஒளிப்பதிவு என நேர்கொண்ட படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் வலிமை படத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வலிமை படத்தில் தல அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் பலருக்கும் அதிகாரபூர்வமாக தெரியும்.

ஆனால் வில்லன் யார் ஹீரோயின் யார் என்பதை தற்போது வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் நமது ஆட்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி ஹீமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர்கள் கார்த்தி கேயா மற்றும் நவதீப் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் கொரானா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு வரவேண்டிய வலிமை படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிச் சென்றதாக தெரிகிறது.

சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் குறைந்த ஆட்களைக் கொண்டு தொடங்கலாம் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்துக்கு அனுப்பிய மெயிலில் கொரானா தாக்கம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அது சம்பந்தமான வேலையில் இறங்கலாம் என கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால் போனி கபூர் மற்றும் வினோத் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்துக்கு எப்போது படம் வெளியிட்டாலும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையாக இருக்கிறாராம் போனி கபூர்.

தன்னுடைய காதலை பற்றி மனம் திறக்கும் திரிஷா….

தன்னுடைய காதலை பற்றி மனம் திறக்கும் திரிஷா….

 

 

 

தென்னிந்திய சினிமாவின் குயின் கதாநாயகி திரிஷா வீட்டில் தங்கவும் ஓய்வெடுக்கவும் நேரம் கிடைக்க செய்த ஊரடங்குக்கு நன்றி என்று கூறுகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் அவர் நேரத்தைப் பயன்படுத்துகிறார், மேலும் அவரது ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு வழக்கமான சமூக ஊடக தொடர்புகளையும் கொண்டிருக்கிறார்.

தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலில், த்ரிஷா தனது வாழ்க்கையை பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், மேலும் ரசிகர்களும் தனிப்பட்ட முறையில் கேள்விகளை கேட்டனர் . தந்திரமான கேள்விக்கு “உண்மையான காதல் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டதற்கு , “நிச்சயமாக, உண்மையிலேயே, அப்படி ஒரு அன்பு இருக்கிறது … மேலும் அந்த காதலை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று அதற்கு த்ரிஷா பதிலளித்தார்.

த்ரிஷாவின் விருப்பமான பாடல் கவுதம் மேனன் இயக்கத்தில், ரஹ்மானின் இசையில் வெளிவந்த “மன்னிப்பாயா ” பாடலாம் . இப்போது “உங்கள் வாழ்க்கையின் துணையை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? என்ற கேள்விக்கு திரிஷா எளிமையாக ” நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை. “… அவர் விரைவில் வருவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பதிலளித்திருக்கிறார். , மேலும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் அதை அறிவிப்பேன் என்றும் கூறுகிறார்.

திரிஷாவின் வரவிருக்கும் படங்களில் மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’, ‘ராங்கி’, ‘பரமபத விளையாட்டு ‘ ஆகியவை அவரது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது வலிமை படக்குழு

 

சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி அஜித் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் அஜித்

 

சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முற்றிலுமாக முடங்கியிருந்த நிலையில், கடந்த 11-ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வலிமை படத்தின் பணிகளும் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது.


வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்திருந்தது படக்குழு.

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் – பிரபல நடிகை…

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் – பிரபல நடிகை…

 

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.

 

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை

 

நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது:-
“தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் வி‌ஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு வி‌ஷயமாக சினிமா உள்ளது.
‘வீரம்‘தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.
நடிகை தமன்னா
நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமான ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்”.
இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் – விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்…

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் – விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்…

 

சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் - விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்

 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து இந்து கடவுள்களுக்கு எதிராக அவர் பேசி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.
விஜய் சேதுபதி மீது இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவை துணுக்கை மறுபதிவு செய்திருந்தார்.
விஜய் சேதுபதி
அப்படி யதார்த்தமாக சொன்னதை மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியதாக அந்த காணொலியை எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறாக பதிவிடுகிறார்கள். அந்த பதிவுகளையும், காணொலியையும் நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்…

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்…

 

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் திறக்காததால் பிரபல நடிகர் தன் மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்திருக்கிறார்.

 

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்

ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிய காட்சி

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக, நீண்ட தலைமுடியுடன் உள்ளனர். குழந்தைகளும் முடி வளர்ந்து அதை வெட்ட ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிவிட்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவி தன் மகனுடன்
ஜெயம் ரவி மட்டும் அல்ல மேலும் சில நடிகர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டிவிட்டுள்ளனர். ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.