அப்பா, அம்மாவுக்கு விதவிதமாக சமைத்து போடுகிறார் சிம்பு!
அப்பா, அம்மாவுக்கு விதவிதமாக சமைத்து போடுகிறார் சிம்பு!
படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது – பிரியாமணி
படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்
தமிழில் பருத்திவீரன் படத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி, தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராணாவுடன் விராட பருவம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர்.
நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு துக்க சம்பவம் அவரை மட்டும் இன்றி, அவருடைய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரியங்காவின் அம்மா, ரோபோ ஷங்கரின் மாமியார் லலிதா உடல்நல பிரச்சனை காரணமாக நேற்று அதிகாலை, (11 ஆம் தேதி அன்று ) மரணமடைந்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதை அறிந்த ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் மற்றும்நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 60% முடிந்துள்ளதாம். இந்நிலையில் கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.
தற்போது அஜித்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அஜித் எப்படி இவ்வளவு பொறுமை, நிதானம் வந்தது என கேட்டனர்.
அதற்கு அஜித் வயது தான் என சிரித்துக்கொண்டே பதில் அளிக்கின்றார். மேலும், இன்னும் 10 வருடம் கழித்து மேலும் பக்குவம் வந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா அளவில் ரூ 200 கோடி வசூல் செய்த கதாநாயகர்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் பற்றி தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. எந்திரன்
2. ஐ
3. பாகுபலி
4. கபாலி
5. பாகுபலி 2
6. அல வைக்குண்டபரமலு
7. ரங்கஸ்தலம்
8. 2.0
9. கே.ஜி.எப்
10. பிகில்
விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாகவே தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் மரணம் தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மனித மனங்கள் ஈரத்துடனும் இரக்கத்துடனும் சக மனிதனைப் பேண வேண்டிய இத்தருணத்தில் ஒரு 15 வயதுப் பெண்னை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம். அந்தச் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்”.
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் வீட்டில் அதிக நாட்கள் இருந்தது இதுதான் முதல் தடவையாகும். குடும்பத்தோடு நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நேரத்தை வீணாக்கவில்லை.
எல்லோரும் கொரோனா கஷ்ட காலத்தில் பயத்துடன் மூச்சை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும். மீள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அம்மாவுக்கு நெருக்கம். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் எனது அம்மாதான். என்னை சரியான பாதையில் வழி நடத்தினார். எனக்கு சமையல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆண்டுகளாக அவர் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
ஆனால் எனக்கு நேரம் இல்லை. எப்போதுதான் கற்றுக்கொள்ள போகிறாயோ? என்று கூறிக்கொண்டே இருப்பார். இப்போது கொரோனா ஊரடங்கில் அம்மாவிடம் சமையல் கற்றுக்கொள்கிறேன். சமையல் அறை பொறுப்பையும் எடுத்துக்கொண்டேன். இதை பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கொரோனா ஊரடங்கில் 2 மாதமாக அம்மாவுடன் சேர்ந்து இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது”.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
விஜய், அஜித்துக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்கள்.
தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிறார். தல இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது.
இந்தநிலையில் சுச்சி Leaks புகழ் பின்னணிப் பாடகி சுசித்ரா அவர்கள், சில நாட்களுக்கு முன்பு, Live பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், “அஜித்துக்கு என்னுடைய சின்ன தாமரை பாட்டு ரொம்ப பிடிக்கும், அந்த பாட்டு வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு பாடினேன், அதை கேட்டு, இந்த விஜய் பயலுக்கு மட்டும் நல்ல நல்ல பாட்டா அமையுது” என்று சுசித்ராவிடம் செல்லமாக வருத்தபட்டாராம்.
இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கோவபடுத்தியுள்ளது. “எங்கள் தளபதி உங்கள் தலையை நண்பன் என்று கூறினார். அதுதான் அஜீத் மீது விஜய் வைத்திருக்கும் மரியாதை ஆகும். ஆனால் அஜீத் விஜயை மதிக்காமல் அந்தப் பையன் இந்த பையன் என்று பேசியுள்ளார் என்று விஜய் ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இது செல்ல கோபம், செல்ல சண்டை என்று எப்படி புரிய வைப்பது?.
‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு ராணா டகுபட்டி இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகரக மாறினார்.
சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்து தெரிவித்திருந்த ராணா அப்போது த்ரிஷாவை ‘பழைய தோழி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அது ஏன் என்று தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
நேற்று (மே 12) தன்னுடைய காதலியை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ராணா. காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்,” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ராணாவுக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள்.
பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவர தாமதம் ஆகுமென்பதால் ஜோதிகா நடிப்பில் வெளியாக போகும் பொன்மகள்வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் இல் 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லாக்டவுன் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 25 ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.